• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

athibantv by athibantv
டிசம்பர் 23, 2025
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 📋

அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாக பார்ப்போம்.

சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அணுசக்தி தொடர்பான சாந்தி மசோதா விளங்குகிறது. அணுசக்தி உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற காரணங்களால் மின்சார தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தற்போதைய மின்உற்பத்தி திறன் அந்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், அதிக அளவில் அணுஉலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிலக்கரி உள்ளிட்ட பாரம்பரிய எரிபொருட்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, அதிக அளவில் கார்பன் டைஆக்சைடு வெளியேறி சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், அணுஉலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது மாசுபாடு மிகக் குறைவாக இருப்பதால், அணுஆற்றல் தூய்மையான ஆற்றல் எனக் கருதப்படுகிறது.

1962ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, இந்தியாவில் அணுஆற்றல் உற்பத்தி செய்யும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சட்டம் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவின் அணுஆற்றல் உற்பத்தி அளவு வெறும் 8.8 ஜிகாவாட் மட்டுமே உள்ளது. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் எட்ட, தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டு அணுஉலைகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்தில், அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை வழங்கிய நிறுவனங்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வெளிநாட்டு அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், உலைகளை வழங்கவும் தயக்கம் காட்டி வந்தன.

இந்தச் சூழ்நிலையில், மேற்கண்ட இரு சட்டங்களிலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இனிமேல் மத்திய அரசுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் அணுஉலைகளை அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் அணுஆற்றல் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த அணுசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் 49 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீடு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, அணுஉலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உலை வழங்கிய நிறுவனங்களுக்குப் பதிலாக, அதனை இயக்கும் மற்றும் நிர்வகிக்கும் நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு அணுஉலைகளை வழங்க முன்வரும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், இந்தியாவில் அமைக்கப்படும் அனைத்து அணுஉலைகளும் கட்டாயமாக காப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், அணுஉலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய திருத்தங்களின் மூலம், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுஆற்றல் உற்பத்தி இலக்கை அடையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

குளிர்ச்சியில் உறையும் சவுதி அரேபியா – காலநிலை மாற்றம் ஒலிக்கும் அபாய சங்கு!

Next Post

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்

Next Post

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
🔴LIVE: தேர்தல் முடிவுகள்

🔴LIVE: தேர்தல் முடிவுகள்

மே 3, 2026
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

மே 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 🔴LIVE: தேர்தல் முடிவுகள்
  • “இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!
  • பாதுகாப்பு திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: சீனாவின் ஆதிக்கத்திற்குத் துணை போவதாக பாஜக கடும் குற்றச்சாட்டு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

🔴LIVE: தேர்தல் முடிவுகள்

🔴LIVE: தேர்தல் முடிவுகள்

மே 3, 2026
“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

“இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்தவர்கள் பழங்குடியினரே!” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் புகழாரம்!

மே 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN