மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அவசியமில்லை – சிவராஜ்குமார் கருத்து

Date:

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அவசியமில்லை – சிவராஜ்குமார் கருத்து

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், கலைஞராக இருந்து கொண்டே சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்றும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா இணைந்து நடித்துள்ள “45: தி மூவி” திரைப்படம் வரும் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற படத்தின் முன்னோட்ட விழாவில் சிவராஜ்குமார், உபேந்திரா, விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன், இயக்குநர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய சிவராஜ்குமார், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் கன்னட மொழி மறுஆக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், சில காரணங்களால் அதனை ஏற்க முடியாமல் போனதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை என்றும், நடிகராக இருந்து எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் உதவ முடியும் என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

20 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டெடுப்பு!

20 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டெடுப்பு! இத்தாலி நாட்டில்...

திருப்பரங்குன்றம் பள்ளிவாசலில் கொடியேற்றம் – சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் பள்ளிவாசலில் கொடியேற்றம் – சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் மதுரை: மதுரை மாவட்டம்...

தோட்டக்கலைத் துறை தனி அடையாளத்துடன் தனித்துறையாக நீடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

தோட்டக்கலைத் துறை தனி அடையாளத்துடன் தனித்துறையாக நீடிக்க வேண்டும் – அண்ணாமலை...

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்ப்பு

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்ப்பு கேரள மாநில...