காங்கோவில் அதிர்ச்சி சம்பவம் – படிக்கட்டுகள் இல்லாததால் விமானத்திலிருந்து குதித்து இறங்கிய பயணிகள்

Date:

காங்கோவில் அதிர்ச்சி சம்பவம் – படிக்கட்டுகள் இல்லாததால் விமானத்திலிருந்து குதித்து இறங்கிய பயணிகள்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள கிண்டு விமான நிலையத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் விமானத்திலிருந்து குதித்து தரையிறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மணிமா மாகாணத்தில் அமைந்துள்ள கிண்டு விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. ஆனால், விமானத்தில் இருந்து பயணிகள் இறங்குவதற்குத் தேவையான நகரும் படிக்கட்டுகள் அல்லது மாற்று வசதிகள் எந்தவிதமாகவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நீண்ட நேரம் விமானத்திற்குள் காத்திருந்த பயணிகள், வேறு வழியின்றி விமானத்தின் நுழைவாயிலில் இருந்து நேரடியாக தரையில் குதித்து இறங்கியுள்ளனர். சிலர் பயம் கலந்த முகபாவனையுடன் கீழே இறங்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

விமான நிலைய நிர்வாகத்தின் அலட்சியத்தையே இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சனம் எழுப்பி வருகின்றனர். அடிப்படை பாதுகாப்பு வசதிகள்கூட இல்லாத விமான நிலையங்கள் குறித்து கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் –...

அடிப்படை தேவைகளை புறக்கணிக்கும் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் – நயினார் நாகேந்திரன்

அடிப்படை தேவைகளை புறக்கணிக்கும் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் –...

சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைப்பெறுகிறது

சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக...

ஆந்திராவில் ரயிலில் இருந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு – சண்டை வீடியோ வெளியீடு

ஆந்திராவில் ரயிலில் இருந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு – சண்டை வீடியோ...