கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் இல்லை – அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Date:

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் இல்லை – அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: கடந்த ஏழு மாதங்களாக அமெரிக்காவுக்குள் ஒரு சட்டவிரோத குடியேறியும் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அந்த உரையில் பேசிய டிரம்ப், ஈரானின் முக்கிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அமெரிக்கா முறியடித்ததாகக் கூறினார். மேலும், கடந்த 10 மாதங்களில் உலகளவில் நடைபெற்ற 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், காசா பகுதியில் அமைதியை உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே அமெரிக்காவின் தெற்கு எல்லையில் நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அதன் பயனாக கடந்த ஏழு மாதங்களாக எந்தவொரு சட்டவிரோத குடியேற்றமும் நிகழவில்லை என்று கூறினார்.

மேலும், அமெரிக்க ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு போர் வீரர் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தலா 1,776 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

டிரம்பின் இந்த உரை, எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை மற்றும் ராணுவ நலத்திட்டங்கள் குறித்து மீண்டும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...