கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக உயர்வு

Date:

கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக உயர்வு

பறவைகள் இடம்பெயரும் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை, பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் கோடியக்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் கோடியக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக, செங்கால் நாரை, கூழைக்கிடா, பூ நாரை, கடல் காகம் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் ஆயிரக்கணக்கில் சரணாலயத்திற்கு வந்து தங்கியுள்ளன.

வெளிநாட்டு பறவைகள் திரளாகக் கூடியுள்ள இந்தக் காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து ரசித்து செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள் நாகப்பட்டினம்...

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில் திரைப்பட விளம்பர...

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம் சுமார்...

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான...