பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா

Date:

பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ளும் சீனா, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க தீர்மானித்துள்ளது.

1980 முதல் 2015 ஆம் ஆண்டு வரை “ஒரு குழந்தை போதும்” என்ற கட்டுப்பாட்டு கொள்கையை கடுமையாக அமல்படுத்திய சீனா, தற்போது அதன் விளைவாக மக்கள் தொகை குறையும் நிலையை எதிர்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி, மக்களை குழந்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

கருத்தடை சாதனங்களின் விலை உயர்வால் அவற்றின் பயன்பாடு குறைந்து, பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வருகிற ஜனவரி 1 முதல் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், அவற்றுக்கு 13 சதவீத மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது

**மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது மூளை கைரேகை...

சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த...

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர...

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?

ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன...