திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு

Date:

திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (அக்.20) காலை நடைபெற்ற சக்கர ஸ்நானம் நிகழ்வுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மாலை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வாஸ்திரம் காணிக்கையாக வழங்கிய நிகழ்வுடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள், காலை–இரவு என வாகன சேவைகள் நடைபெற்றன.

மொத்தம் 16 வாகனங்கள், ஒரு தங்கரத ஊர்வலம், ஒரு மகா ரத புறப்பாடு, மற்றும் ஒரு தீர்த்தவாரி நிகழ்வுடன் திருப்பதி முழுவதும் பண்டிகை சூழல் நிலவியது.

மேலும், நாடு முழுவதும் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை பெரிதும் கவர்ந்தன.

விழாவின் ஐந்தாவது நாள் இரவு நடைபெற்ற கருட வாகன சேவையில், சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீநிவாச பெருமாளை தரிசித்தனர்.

நிறைவு நாளான நேற்று காலை, மலையப்பர், தேவி, பூதேவி சமேதமாக சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக தெப்பக்குளம் நோக்கி கொண்டு வரப்பட்டனர். அங்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. அந்த நேரத்தில், பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என முழக்கமிட்டபடி தெப்பக்குளத்தில் மூன்று முறை மூழ்கி புனித நீராடினர்.

மாலை நேரத்தில் தங்கக் கொடியமரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு, இவ்வாண்டு பிரம்மோற்சவ விழா ஆனந்த நிமிடங்களில் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த புதிய முயற்சி: மொராதாபாத்தில் “ராம் அனுமன்” சிற்பப் பூங்கா திறப்பு!

ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த புதிய முயற்சி: மொராதாபாத்தில் “ராம் அனுமன்” சிற்பப்...

சிதைந்த ஈரானின் எண்ணெய் பொருளாதாரம்: உலகச் சந்தையை உலுக்கும் இஸ்ரேல் – அமெரிக்கா தர்மசங்கடம்!

சிதைந்த ஈரானின் எண்ணெய் பொருளாதாரம்: உலகச் சந்தையை உலுக்கும் இஸ்ரேல் -...

“ரேஷன் கடைகளில் பிரதமர் படம் எங்கே?” – கோவையில் பாஜகவினர் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல்!

“ரேஷன் கடைகளில் பிரதமர் படம் எங்கே?” - கோவையில் பாஜகவினர் உண்ணாவிரதம்...

நாகர்கோவிலில் பி.எம்.எஸ் (BMS) சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் பி.எம்.எஸ் (BMS) சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கன்யாகுமரி...