2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2027ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கினார்.
அவர் கூறியதாவது:
2027ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்கட்டமான வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.