போரூரில் ரூ.2,000 கோடி முதலீடு – ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

Date:

போரூரில் ரூ.2,000 கோடி முதலீடு – ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை போரூரில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான இந்த நிறுவனம், கடந்த 2023-ஆம் ஆண்டு போரூரில் தனது உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தொடங்கியது.

இப்போது, அந்த மையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்து 3,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலர் நா. முருகானந்தம், தொழில் துறை செயலர் வி. அருண் ராய், மற்றும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், இந்தியா மேலாண் இயக்குநர் வேணு நுகரி ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள்...

நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம்

நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம் பிரபல இயக்குநர் சுந்தர்.சி...

தங்கம் விலை ஏற்றம் – பவுனுக்கு ரூ.480 உயர்வு

தங்கம் விலை ஏற்றம் – பவுனுக்கு ரூ.480 உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

தேஜஸ்வியின் ‘ஜீவிகா தீதி’ வாக்குறுதிகள் பயனற்றவை: பாஜக – ஜேடியு கடுமையான விமர்சனம்

தேஜஸ்வியின் ‘ஜீவிகா தீதி’ வாக்குறுதிகள் பயனற்றவை: பாஜக – ஜேடியு கடுமையான...