நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் பலி, 14 பேர் காயம்

Date:

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் பலி, 14 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 6 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

வாஷி பகுதியில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பற்றியது. பின்னர் தீ 11 மற்றும் 12-வது மாடிகளுக்கும் வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ அதிகாலை 4 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்; காயமடைந்த 14 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடு திரும்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்!

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்! ராஜஸ்தான்...

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா!

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா! மதுரை மாவட்டம் திருமங்கலத்தை...

சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று பெண்ணின் கிட்னி விற்பனை – அதிர்ச்சி தகவல் வெளியே!

சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று பெண்ணின் கிட்னி விற்பனை – அதிர்ச்சி தகவல்...

காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவு – கடும் எதிர்ப்புகள்

காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவு – கடும் எதிர்ப்புகள் இஸ்ரேல்–ஹமாஸ் போருக்கு...