நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் பலி, 14 பேர் காயம்

Date:

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் பலி, 14 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 6 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

வாஷி பகுதியில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பற்றியது. பின்னர் தீ 11 மற்றும் 12-வது மாடிகளுக்கும் வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ அதிகாலை 4 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்; காயமடைந்த 14 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடு திரும்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும்...

“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

"ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது": போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப்...

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்...

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை!

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும்...