• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 காவல் கண்காணிப்பு மரணங்கள் – ஷேக் ஹசீனாவின் ஆட்சியைவிட மோசமான சூழல்!

athibantv by athibantv
டிசம்பர் 12, 2025
in World
A A
0
👁️ 1.9K

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 காவல் கண்காணிப்பு மரணங்கள் – ஷேக் ஹசீனாவின் ஆட்சியைவிட மோசமான சூழல்!

கடந்த ஒரு ஆண்டாக வங்கதேசம் முழுவதும் காவல்துறை காவலில் மரணங்கள், கொலைச் சம்பவங்கள், கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவை இடைவிடாமல் நடைபெற்று வருவதாகவும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் காட்டும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஒரு விரிவான செய்தி:

RelatedPosts

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நீண்டகால ஆட்சியில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதால், அவரின் ஆட்சி சர்வாதிகாரமாக மாறுவதாக விமர்சிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அவர் மீது நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இறுதியில் 2024 ஆகஸ்ட் 5 அன்று பதவியை விட்டு விலகி இந்தியாவில் புகலிடம் நாடினார்.

அதற்குப் பிறகு அதிகாரத்தில் வந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் அமைதி நிலவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. ஆனால் தற்போது அதற்கு எதிரான தரவுகள் வெளிப்படுகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும், மனித உரிமை மீறல்களைத் தடுக்க சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 256-க்கும் மேற்பட்ட கலவரங்களும் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதில் 140 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 231 பேருக்கு மேல் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர் என Human Rights Support Society (HRSS) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வன்முறைகளால் இந்து சமூகத்தின் வீடுகள், கோவில்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துர்கா பூஜை மற்றும் பல இந்து நிகழ்வுகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சில இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு வன்முறையை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், Ain o Salish Kendra (ASK) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 11 மாதங்களில் சட்டவிரோதமாக 29 பேர் காவல் நிலையங்களில் இறந்துள்ளதாகவும், 28 தண்டனை கைதிகளும் 55 விசாரணை கைதிகளும் சிறைகளில் சந்தேகமான நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, 90 கைதிகள் நோயால் இறந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரி சஹாதத் ஹொசைன், தற்கொலை, கலவரங்களில் இறந்தவர்களை கூட மனித உரிமை அமைப்புகள் காவல் மரணங்களாக கணக்கிட்டு வருகின்றன என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை இடைக்கால அரசின் காலத்தில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளதாக Rights and Risks Analysis Group (RRAG) குறிப்பிட்டுள்ளது—இது முந்தைய ஆண்டை விட 230% அதிகம்.

சட்டத்திற்கு புறம்பான அனைத்து கொலைகள் மற்றும் காவல் கண்காணிப்பு மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், மேலும் காவல்துறை சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

Related

Tags: World
Previous Post

குட்டை நீரில் மகிழ்ச்சியாக திளைத்த யானைகள்!

Next Post

தாய்லாந்தில் மறைந்துள்ள லுத்ரா சகோதரர்கள் – அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடிய கோவா காவல்துறை!

RelatedPosts

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

மார்ச் 21, 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

மார்ச் 21, 2026
Next Post
Home

தாய்லாந்தில் மறைந்துள்ள லுத்ரா சகோதரர்கள் – அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடிய கோவா காவல்துறை!

Home

திருச்சி மாநகராட்சி நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்பினர் உண்ணாவிரதத்தில்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!
  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.