அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் – டிரம்ப்

Date:

அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் – டிரம்ப்

அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அரிசி வரத்து நடைபெறும் விவகாரம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க விவசாயிகளுக்கு பில்லியன் டாலர் அளவில் நிதி உதவி வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.

அப்போது, மலிவு விலை இறக்குமதிகளால் உள்ளூர் சந்தையில் போட்டியிட முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் முறையிட்டனர்.

இந்த சூழலில், டிரம்ப் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்திய அரிசி ஏன் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது? அதற்கான சுங்கவரி சலுகை ஏதும் உள்ளதா? என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கருவூல செயலாளர், இந்திய அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தக உடன்பாட்டில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியாவில் இருந்து பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படக் கூடாது என்றும், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் கவனிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்! நீலகிரியின் சொந்த...

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்!

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்! சென்னையில் இன்று...

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது! சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து...

ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு

ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள்...