உலகின் நுண்ணறிவு உற்பத்தி மையமாக UAE உருவாகிறதா? : 60 டிரில்லியன் AI டோக்கன்களை உருவாக்கும் பெரும் திட்டம்!

Date:

உலகின் நுண்ணறிவு உற்பத்தி மையமாக UAE உருவாகிறதா? : 60 டிரில்லியன் AI டோக்கன்களை உருவாக்கும் பெரும் திட்டம்!

ஐக்கிய அரபு அமீரகம், மொத்தம் 60 டிரில்லியன் செயற்கை நுண்ணறிவு டோக்கன்களை உருவாக்கும் இலக்குடன் முன்னேறுகிறது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை எதற்காக மிக முக்கியம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அதிவேக வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், UAE–யின் அபுதாபி நகரில் அமைந்துள்ள ‘ஸ்டார்கேட் AI’ வளாகத்தில் 60 டிரில்லியன் AI டோக்கன்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச AI துறையின் திசை மாற்றப்படலாம்.

அப்படியானால் AI டோக்கன் என்றால் என்ன?

AI கணக்கீடுகளின் முக்கிய அலகுகளாக விளங்குவது ‘டோக்கன்கள்’. தரவை செயலில் பயன்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளாக மாற்றும் மிகச் சிறிய தகவல் துண்டுகள் இவை. AI அமைப்புகள் கற்றல், செயலாக்கம், உருவாக்கம் போன்ற பணிகள் செய்யும்போது பயன்படுத்தும் அடிப்படைத் தகவல் கூறுதல்கள் டோக்கன்கள் ஆகும்.

இதில் உரை, படங்கள், ஒலி, வீடியோ போன்றவை அடங்குகின்றன. ஒவ்வொரு டோக்கனிலும் எழுத்து, எண், குறியீடுகள், இடைவெளிகள் போன்றவை இடம்பெறலாம். இந்த மாற்றும் செயல்முறையையே டோக்கனைக்சன் என்று அழைப்பார்கள்.

தகவல்களின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளவும், முடிவு எடுக்கும் திறன், பகுப்பாய்வு, உருவாக்கம் போன்ற செயல்களை மேம்படுத்தவும் AI மாதிரிகள் பெருமளவிலான டோக்கன்கள் தேவைப்படுகிறது.

நவீன AI–யில் டோக்கன்களை செயலாக்கும் வேகமும் பரப்பளவும், ஒரு AI அமைப்பு எவ்வளவு புத்திசாலியாக செயல்படுகிறது என்பதை நேரடியாக நிர்ணயிக்கிறது. இதற்காகவே ‘AI தொழிற்சாலை’ எனப்படும் புதிய தரவு மையத் தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

இது சாதாரண டேட்டா சென்டர்களை விட மிக அதிக அளவிலான டோக்கன்களை வேகமாகவும் திறமையாகவும் செயலாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலத் தரவை தற்செயலாகவே செயல்படும் நுண்ணறிவுகளாக மாற்றும் மையங்களாகவும் இவை செயல்படுகின்றன.

அபுதாபியில் நடந்த மில்கென் மத்திய கிழக்கு – ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில், UAE அமைச்சர் ஓமர் அல் ஒலாமா, “உலகின் நுண்ணறிவு உற்பத்தி மையமாக” நாடை மாற்றும் நாட்டின் மகத்தான நோக்கை விளக்கினார். ஸ்டார்கேட் போன்ற AI தொழிற்சாலைகள் தரவை நுண்ணறிவாக மாற்றி, முடிவெடுக்கும் திறன், செயல்திறன் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை எனவும் கூறினார்.

எதிர்காலத்தில் டோக்கன்களே மிகப் பெரிய மதிப்பு கொண்ட சொத்தாக மாறும் என்று அவர் வலியுறுத்தினார். அதேபோல், ஆற்றல் துறையில் AI பயன்படுத்தியதன் மூலம் UAE–க்கு 136 மில்லியன் டாலர் சேமிப்பு கிடைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

60 டிரில்லியன் AI டோக்கனை உருவாக்குவதற்கான துல்லியமான காலக்கட்டத்தை அறிவிக்கவில்லை என்றாலும், திட்டமிட்ட நடைமுறைகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளின் மூலம் UAE அதன் இலக்கை நோக்கி துல்லியமாக முன்னேறி வருகிறது.

21ஆம் நூற்றாண்டில் பல தொழில்களை மாற்றக்கூடிய மற்றும் நாட்டின் போட்டித் திறனை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வலுவான AI சுற்றுச்சூழல் UAE–யில் உருவாகும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி –...

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு முன்னாள் அமைச்சர்...

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட 10 செய்திகள் – கூகுள் பட்டியல் வெளியீடு

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட 10 செய்திகள் – கூகுள் பட்டியல்...