டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை மாற்றியமைக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை அமெரிக்க வெளியுறவுத் துறைத் தலைவர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஏதேனும் நாடு அல்லது அரசு அமைப்பிற்கு உதவி செய்ய விரும்புபவர்கள், அந்த அரசையே நேரடியாக அணுகி உதவி வழங்க வேண்டும். அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்கி, அவர்கள் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்க உதவ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.