சபரிமலை தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு கூடுதல் ஒரு மாத அவகாசம்

Date:

சபரிமலை தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு கூடுதல் ஒரு மாத அவகாசம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையை நிறைவு செய்ய, மேலும் ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கிக் கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை கோயிலுக்குச் சொந்தமான தங்கம் முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட பல உயரதிகாரிகள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தி இருந்தது.

அந்த குறிப்பிட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், தேவையான ஆதாரங்களை சேகரிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதை ஆய்வு செய்த நீதிமன்றம், விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி, அதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லை

80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லை தமிழகத்தில் புதிதாக 80,000...

மனதில் இருந்து சாதி சிந்தனையை அகற்ற வேண்டும்

மனதில் இருந்து சாதி சிந்தனையை அகற்ற வேண்டும் சாதிக்கு அடிப்படை காரணமாக உருவாகும்...

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க நடவடிக்கை –...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு தமிழகத்தில்...