பிரதமர் மோடியின் நடவடிக்கை நல்லெண்ணத்தின் சைகை – வங்கதேச தேசியவாத கட்சியின் பாராட்டு
வங்கதேச முன்னாள் பிரதமர் மற்றும் தேசியவாத கட்சித் தலைவரான கலீதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்று காரணமாக டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
பிரதமர் மோடி வெளிப்படுத்திய இந்த அக்கறை நல்லெண்ணத்தின் சைகை என வங்கதேச தேசியவாத கட்சியினர் பாராட்டியுள்ளனர்.