இன்று துவங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு
நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. அந்த அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சேர்த்து 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, இன்றே தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த அமர்வில், அணு சக்தி தொடர்பான மசோதா, நிறுவனச் சட்ட திருத்தம் உள்ளிட்ட 10 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமர்வு சீராக நடைபெறுவதற்காக முன்பே அனைத்து கட்சிகளையும் கலந்து கொண்டு ஆலோசனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.