“நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன்” — இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்

Date:

“நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன்” — இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்

‘பைசன்’ திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னைச் சுற்றியுள்ள சமூக அனுபவங்கள் குறித்து உணர்ச்சியுடன் பேசியுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் ‘பைசன்’ படக்குழு ரசிகர்களை சந்தித்தது. இதில் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன், மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, சில கேள்விகளுக்குப் பதிலளித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:

“மணத்தி கணேசன் கதையைச் சொல்லக்கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. நான் இந்த நாட்டின் பிரஜை. எனக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. என்னை பாதித்த என் அப்பா, தாத்தா, சமூகத்தின் கதைகளைச் சொல்லாமலிருப்பது எனக்கு முடியாது.

மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவன், ஏனென்றால் நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன். அதை மறந்துவிட்டு சாதாரணமாக பாடு, ஆடு என்று சொல்ல முடியாது. நான் தொடர்ந்து சாதியை எதிர்ப்பேன்.

இதுவரை எடுத்த படங்களுக்கு அரசு விருதுகள் வழங்கியுள்ளது. தமிழ் சமூகம் என்னை கொண்டாடி வருகிறது. ஆனால் சமூகத்தில் இருக்கும் சாதியை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்.

ஒரு படைப்பாளியாக எனக்கு அழுத்தம் இல்லை, ஆனால் பொறுப்பு இருக்கிறது. என் சினிமாவை மக்கள் நம்புகிறார்கள் என்பதால் அந்த பொறுப்பை நான் உணர்கிறேன். சினிமாவை பொழுதுபோக்காக எடுத்து விட்டு தூங்க முடியாது. நான் இல்லாமலாயினும் ‘மாரி செல்வராஜ் இதை செய்துவிட்டு போனவர்’ என்று மக்கள் சொல்ல வேண்டும்,” என அவர் உணர்ச்சியுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை

வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3...

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை காவலர்...

வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க வேண்டும்: ரவி...

“நான் சாராயம் கொடுக்கவில்லை… புத்தகம் கொடுத்திருக்கிறேன்” – ரசிகர்களை கண்டித்த மாரி செல்வராஜ்

“நான் சாராயம் கொடுக்கவில்லை... புத்தகம் கொடுத்திருக்கிறேன்” – ரசிகர்களை கண்டித்த மாரி...