சீனாவுடன் பதற்றம் தீவிரம்: ஜப்பான்–இந்தியா ஒத்துழைப்பு வேகமாக வளர்ச்சி!

Date:

தைவான் பிரச்சனையைச் சுற்றியுள்ள ஜப்பான்–சீனா மோதல் கடுமையாகி வரும் நிலையில், ஜப்பான்–இந்தியா உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்று வருகின்றன. இந்த மாற்றத்துக்கான விரிவான விவரங்கள் பின்வருமாறு:

கடந்த நவம்பர் 7-ம் தேதி ஜப்பான் பாராளுமன்ற கூட்டத்தில், “சீனா தைவானை முற்றுகையிட்டால் அது ஜப்பான் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையுமா? அப்படித்தான் இருந்தால் ஜப்பான் தன் ராணுவத்தை அனுப்புமா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் சனே தகாய்ச்சி, சீனா தைவான் கடற்கரையில் போர் கப்பல்களை நிறுத்துவது ஜப்பானின் பாதுகாப்பை பாதிக்கும் செயலாக கருதப்படுவதாக கூறினார். மேலும், தைவானை நோக்கி சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், ஜப்பானும் தற்காப்பு நோக்கில் இராணுவமாக பதிலளிக்க வேண்டியிருக்கலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இத்துடன், அமெரிக்காவுடன் ஜப்பானுக்கு உள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் அவர் நினைவூட்டினார். தைவான் பிரச்சாரத்தில் இதுபோன்ற வார்த்தைகள் எந்த ஜப்பான் பிரதமரும் இதுவரை பயன்படுத்தாததால், தகாய்ச்சியின் இந்தக் கருத்து டோக்கியோ மற்றும் பீஜிங் இடையே பெரும் விவாதத்தையும் கவலையையும் உருவாக்கியது.

ஜப்பான் பிரதமரின் நிலைப்பாடு, சீனாவின் அதிருப்தியை தூண்டியது என்பது தெளிவு. உடனடியாக, “ஜப்பான் தைவானில் இராணுவம் இறங்க முயன்றால் கடுமையான எதிர்ப்பை சந்திக்கும்” என்று சீனா எச்சரித்தது. மேலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிற்கு புகார் கடிதம் அனுப்பி, ஜப்பான் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்குப் பொருத்தமல்ல என்று சீனா கடுமையாக குற்றம் சாட்டியது.

சீன தூதர் ஜெனரல் சூ ஜியானின் சர்ச்சைக்குரிய கருத்தான “ஜப்பான் பிரதமரின் தலை துண்டிக்கப்படும்” என்ற பதிவு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் பெருக்கியது. தைவான் குறித்த கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை ஜப்பான் நிராகரித்தது. தங்கள் நிலைப்பாடு மாறாது என்றும் ஜப்பான் அரசு உறுதியாக தெரிவித்தது.

தூதரக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சீனா ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதைத் தடைசெய்ததோடு, ஜப்பான் பயணம் செய்யக்கூடாது என்று சீன குடிமக்களுக்கு அறிவுரை வழங்கியது.


இந்தியா–ஜப்பான் உறவு ஏன் அதிகரிக்கிறது?

சீனா எல்லை மற்றும் கடல் பாதுகாப்பில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு பொதுவான அச்சுறுத்தலாக இருப்பதால், இரு நாடுகளும் தங்கள் தூதரக, பாதுகாப்பு மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்தி வருகின்றன.

  • டெல்லி–மும்பை தொழில்துறை நெடுஞ்சாலைக்கு ஜப்பான் மிகப்பெரிய முதலீடு செய்துள்ளது.
  • மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் கூட ஜப்பான் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்று வருகிறது.
  • குவாட் கூட்டணியின் மூலம் இந்தோ–பசிபிக் பகுதி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த இலக்குகளுக்காக இந்தியா–ஜப்பான் இணைந்து செயல்படுகின்றன.

சீனாவுடன் பதற்றம் அதிகரிக்கும் போது, ஜப்பான் தனது வணிக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா முழுவதும் விளையாட்டு வளர்ச்சியின் புதிய மையமாக உயர்ந்து வரும் நகரம் அகமதாபாத்….

இந்தியா முழுவதும் விளையாட்டு வளர்ச்சியின் புதிய மையமாக உயர்ந்து வரும் நகரம்...

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது!

நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்...

வடியாத மழைநீர்… வளம் குன்றும் வயல்கள்… வாடும் விவசாயிகளின் மனவேதனை!

வடகிழக்கு பருவமழை பலத்தடிப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து...

தூய்மை பணியாளர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு: உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி விமர்சனம்

தூய்மை பணியாளர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு: உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர்...