பாகிஸ்தானின் சதி முயற்சியை தடை செய்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உயரிய பாராட்டு!

Date:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த பெரும் தாக்குதலைத் தடுப்பதன் மூலம் 250 பேரின் உயிரை பாதுகாத்ததற்காக சிஐஎஸ்எப் வீரர்கள் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையாக, இந்திய பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து, பாகிஸ்தானில் அமைந்திருந்த முக்கியமான தீவிரவாத முகாம்களை சுட்டுத்தகர்த்தன. இதில், பயங்கரவாதிகளுக்கு துணைநின்ற பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பெரிய இழப்புகள் ஏற்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் நடுவில், பாகிஸ்தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த ஆபத்தான சதி முயற்சியை சிஐஎஸ்எப் வீரர்கள் திறம்பட தடுப்பதில் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற 19 வீரர்களுக்கு இயக்குநர் ஜெனரல் விருது வழங்கப்பட்டது.

மே 6ஆம் தேதி இரவு தொடங்கிய தாக்குதல் முயற்சிகளின் போது, உரி நீர்மின் நிலையத்தை இலக்காகக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. அந்த சமயத்தில் துணை தளபதி ரவி யாதவ் தலைமையிலான குழு, இந்திய நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், அப்பகுதியில் இருந்த 250 பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியது. மேலும், பல பாகிஸ்தான் ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக சிஐஎஸ்எப் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகம் முழுவதும் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொலை—ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

பெண்கள் மீது நடைபெறும் வன்முறை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு...

20 லட்சம் வாக்காளர்களை அடைய முடியாமல் தடுமாறும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20...

கூட்டு பட்டாவில் இனி வாரிசுகள் பெறும் சொத்து பங்கு தெளிவாக குறிப்பிடப்படும்: வருவாய்த்துறை

வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக...

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை...