உலகப் பணக்காரர் எலான் மஸ்க் சொல்லுவதாவது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை நீக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் திறன் கொண்டவை என்பதாகும்.
அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் பேசிய அவர், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக பலரது வேலைகள் குறைவாகும் என்ற அச்சம் இருந்தாலும், AI மற்றும் ரோபோக்கள் உலகளாவிய செழுமையை உருவாக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
மஸ்க் கூறியதாவது, உலக வறுமையை எதிர்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதற்கான நிரந்தரத் தீர்வு தொழில்நுட்பமே என்பதாகும். AI மற்றும் Humanoid ரோபோக்கள் உண்மையில் வறுமையை ஒழிக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மக்கள் பணம் பற்றிக் கவலைப்பட தேவையில்லை; ஒரு கட்டத்தில் பணத்தின் பயன்பாடு தேவையற்றதாக மாறும் என்றும், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், AI வளர்ச்சியால் விவசாயம் மற்றும் பிற அத்தியாவசியமற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.