பாகிஸ்தான் ரசாயன ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டு: பலூச் மக்களை குறிவைத்து ‘போர்க்குற்றம்’— மிர் யார் பலூச் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Date:

தென் மேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலூச் மக்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


ரசாயன வெடிமருந்துகள் பயன்பாடு — சர்வதேச சட்ட மீறல்

கலாட், குஜ்தார், போலன், கோஹ்லு, கஹான், சாகை, பஞ்ச்கூர், நோஷ்கி உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும், அந்தத் தாக்குதல்களில் ஆபத்தான ரசாயனத் துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் மிர் யார் பலூச் தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடங்களில் கிடைத்துள்ள குப்பைகளில் ரசாயனப் பாகங்கள் தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

1997 முதல் பாகிஸ்தான் கையெழுத்திட்டிருக்கும் ‘இரசாயன ஆயுதத் தடைக் கூட்டமைப்பு’ ஒப்பந்தத்தை இது நேரடியாக மீறுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


போர்க்குற்றம் செய்வதாக பலூச் ஆயுதக் குழுவினர் குற்றச்சாட்டு

பலூச் ஆயுத அமைப்புகள், மக்கள் மீது ரசாயன மற்றும் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானது, இது நேரடியாக போர்க்குற்றம் என்று கண்டித்துள்ளன.

தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடரும் உரிமை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


பலூச் விடுதலை இயக்கம் — பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ராணுவ நடவடிக்கை

பாகிஸ்தானின் 44% பரப்பளவை உள்ளடக்கிய பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க பலூச் விடுதலை அமைப்புகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றன.

கடந்த மே மாதத்தில் பலூச் விடுதலை ராணுவம் பெரும் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாகிஸ்தான் கொடியை அகற்றி பலூச் தேசியக் கொடியை ஏற்றினர்.

இதனைத் தொடர்ந்து மிர் யார் பலூச், ‘பலுசிஸ்தான் குடியரசு’ என தனி நாடு அறிவித்தும், இந்தியாவிடம் டெல்லியில் தூதரகம் அமைக்க அனுமதி கோரியும், ஐநா அங்கீகாரம் கோரியும் இருந்தார்.


2005 முதல் தொடரும் குற்றச்சாட்டுகள்— நடவடிக்கையில்லை

2005 ஆம் ஆண்டிலும் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் ஆட்சி காலத்தில் பலுசிஸ்தானில் பெருமளவில் பாஸ்பரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயன வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவை அனைத்தும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பலூச் மக்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் சாடுகின்றனர்.


இனப்படுகொலைக்கான வழி?

தொடர்ச்சியாக ரசாயன ஆயுதங்கள் வரை பயன்படுத்தப்படுவது, பலூச் மக்களை குறிவைத்து “இனப்படுகொலை” நடத்துவதற்கான பரிசோதனையான ராணுவ நடவடிக்கை என பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பெங்களூருவில் 7.11 கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்: போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் பணம்...

‘மக்கள் துடிக்கும் வேளையிலும் உல்லாச பயணமா?’ – உதயநிதியை குறிவைத்து இபிஎஸ் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக...

சிறைக்கைதிகள் நலத் திட்டங்கள் முடக்கம்? – அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிப்பு என குற்றச்சாட்டு

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்கவும், கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட...