“தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். ஆனால், அத்தகைய விளக்கம் முற்றிலும் தவறானது. இது ஒரு தனிப்பட்ட உயிர் அர்ப்பணிப்பு செயல் என இஸ்லாமிய இலக்கணத்தில் குறிப்பிடப்படுகிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் உயிர் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது செய்யப்படும் செயலே இது. எனவே, இது ஒருவர் இறக்கப்போகிறார் என்ற எண்ணத்துக்கு முற்றிலும் மாறானது,” என்று அந்த பழைய வீடியோவில் உமர் கூறியுள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது, கடந்த வாரம் வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட காரை ஓட்டி டெல்லியின் செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியார். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
அக். 2 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 28ஆம் தேதி வரை தாக்குதலுக்கான திட்டத்தை அவர் தீவிரமாக தயார் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தற்கொலை தாக்குதல் குறித்து உமர் முன்பு வழங்கியிருந்த இந்த வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. இந்த வீடியோவை பயன்படுத்தி, மற்ற இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு திருப்ப முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளிடம் நிலவுகிறது.