ஜப்பான், டோக்கியோவில் நடைபெறும் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனையை உருவாக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனா பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தகுதி சுற்றில், பிரஞ்சலி பிரசாந்த் துமல் 572 புள்ளிகளைக் குவித்து உலக சாதனை நிரூபித்துள்ளார்.
ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் அபினவ் தேஷ்வால் 235.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கொரியாவின் யங் கிம் 238.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.