பிஹார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அவரது குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, லாலுவின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா, தம்பி தேஜஸ்வியின் கூட்டாளிகள் அவர்களது பெற்றோர் வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். இது லாலுவுக்கு தனிப்பட்ட மனஅழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்பு, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், கடந்த மே மாதம் கட்சியிலும், குடும்பத்திலும் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தனிக் கட்சி தொடங்கி பிஹார் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், தேஜ் பிரதாப் தனது சமூக வலைதள கணக்கில் கூறியது:
“எனது சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கான பொறுப்பை நான் ஏற்க முடியாது. துரோகிகள் தங்கள் தவறுகளுக்கு சரியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். எனது பெற்றோரை மனஅழுத்தமும், உடல் அழுத்தமும் சந்திக்கச் செய்ய சிலர் முயற்சித்து வருகிறார்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த சம்பவத்தில் நீதி நடவடிக்கை, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிஹார் அரசு முன் கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.