ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தனுஷ் இயக்குவாரென சில தகவல்கள் பரவி வந்தன.
‘ஜெயிலர் 2’ பிறகு ரஜினியின் அடுத்த படம் சுந்தர்.சி இயக்கவும், கமல் ஹாசன் தயாரிக்கவும் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே சுந்தர்.சி அந்த இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தது, திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினியின் 173-வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள்? என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. பல இயக்குநர்கள் கதைகளை ரஜினிக்கு கூறி வருவதாகவும் தகவல். இதில் தனுஷும் ஒரு கதை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்ததாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் இதுகுறித்து விசாரித்த போது,
“இது வெறும் வதந்தி மட்டுமே. இப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை” என தெளிவுபடுத்தப்பட்டது.
தற்போது தனுஷ் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பிறகு மாரி செல்வராஜ் மற்றும் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அவர் இயக்கும் அடுத்த படம் உருவாக இன்னும் காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.