விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய உத்தரவு!

Date:

இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பும் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் — என பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இருவரும் ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் ரசிகர்களின் மனதில் இன்னும் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில், இனி ரோஹித் மற்றும் கோலியைப் பற்றி விமர்சனங்கள் ஓய்ந்துவிட்டன என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த புதிய கட்டளை ஆச்சரியமாக அமைந்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட வழிகாட்டுதலின்படி:

“இந்திய அணிக்காக தொடர்ந்து தேர்வாக வேண்டுமெனில், உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கர் தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.

அஜித் அகார்க்கர் விளக்கம்

அஜித் அகார்க்கர் கூறியதாவது:

“சர்வதேச வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தங்கள் ஆட்டத்தை கூர்மையாக வைத்துக் கொள்ள இதுவே சிறந்த வழி. இதை நாங்கள் முன்பே வலியுறுத்தியுள்ளோம்.”

அவர் மேலும் கூறினார்:

“ரோஹித், கோலி போன்ற மூத்த வீரர்களை ஒவ்வொரு சர்வதேசப் போட்டியிலும் சோதனைக்குட்படுத்த முடியாது. அவர்கள் மீண்டும் விளையாடத் தொடங்கியதும் அவர்களின் நிலையை மதிப்பிட முடியும். அதற்காகவே இந்த உள்நாட்டு கிரிக்கெட் பங்கேற்பு அவசியம்.”

ரோஹித், கோலியின் அடுத்த கட்டம்

இந்த உத்தரவுக்குப் பிறகு ரோஹித் சர்மா, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தாம் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விராட் கோலி பங்கேற்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

விஜய் ஹசாரே டிராபியில், டெல்லி அணி (கோலி சேர்ந்தால்) முதல் போட்டியில் ஆந்திரா அணியை எதிர்கொள்கிறது.

மும்பை அணி சிக்கிம் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...