இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல், சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்க, சீன தூதரகத்தின் உதவியை நாடியுள்ளார்.
அவரது விசா விண்ணப்பம் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதால், சுமித் நாகல் தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் உடனடியாக உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, சீன தூதரகத்திடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல் 275வது இடத்தில் உள்ளார்; முதல் 100 இடங்களில் இல்லாததால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நேரடியாக பங்கேற்க முடியாது. அவர் வைல்ட் கார்டு அல்லது தகுதிச் சுற்றுகள் வாயிலாக மட்டுமே நுழைய முடியும்.
இதையடுத்து, 2026 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள, பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ள சுமித் நாகல் செங்டுவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். விசா பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அவர் அந்த சுற்றை தவறவிடும் சூழ்நிலை உருவாகும், இது 2026 கிராண்ட்ஸ்லாம் வாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.