கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

Date:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து வடம் பிடித்தனர்.

திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் போது, தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் பல்லக்கியில், மாலையில் வாகனங்கள், சப்பரங்கள் வழியாக அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று, காலை 4 மணிக்கு கோயில் திறந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, 11:12 மணிக்கு ரதங்கள் நான்கு வீதிகளையும் சுற்றி முடிந்தது.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, வணிக வைசியா சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 11-ம் நாளில் (நவம்பர் 14) பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளார். அதே இரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அம்மனுக்கு காட்சி கொடுக்கப் போகின்றார். 12-ம் நாளான 15-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

இவை தொடர்பான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரானின் அரசியல் சூழல்… இந்திய அரசின் அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரானின் அரசியல் சூழல்...

தற்போதைய நிலவரப்படி… ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி காலமானார்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 1, 2026) போர்ச்...

அதிமுகவில் மீண்டும் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு!

அதிமுகவில் மீண்டும் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு! சென்னை:...