ரஞ்சி ட்ரோபி: ஆந்திராவை எதிர்த்து 107 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழக அணி

Date:

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ரஞ்சி ட்ரோபி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் வித்யுத் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். ஆந்திராவுக்காக பிருத்விராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆந்திர அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷேக் ரஷீத் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார். தமிழக பந்துவீச்சாளர்களில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் பாலசுப்பிரமணியம் 51 ரன்கள், பிரதோஷ் ரஞ்சன் பால் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதனால் தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்று, இன்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே மண் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே மண் பானை தயாரிப்பு பணிகள்...

ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம் ராமநாதபுரம்...

புதிய வேகத்தில் இந்தியா : அடுத்த இலக்கை நோக்கி முன்னேற்றம்

புதிய வேகத்தில் இந்தியா : அடுத்த இலக்கை நோக்கி முன்னேற்றம் ஜப்பானை பின்னுக்கு...

வங்கதேசத்தில் இரு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது தாக்குதல் – நிலவும் அச்சநிலை

வங்கதேசத்தில் இரு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது தாக்குதல் – நிலவும்...