ரஞ்சி ட்ரோபி: ஆந்திராவை எதிர்த்து 107 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழக அணி

Date:

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ரஞ்சி ட்ரோபி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் வித்யுத் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். ஆந்திராவுக்காக பிருத்விராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆந்திர அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷேக் ரஷீத் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார். தமிழக பந்துவீச்சாளர்களில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் பாலசுப்பிரமணியம் 51 ரன்கள், பிரதோஷ் ரஞ்சன் பால் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதனால் தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்று, இன்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...