“அனுபவமே எங்கள் பலம்” — ஆஷஸ் தொடரை முன்வைத்து ஜோஷ் ஹேசில்வுட்
வரும் நவம்பர் 21-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் 14 பேர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35), ஸ்காட் போலண்ட் (36) ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஹேசில்வுட் கூறியதாவது:
“அனுபவமே எங்கள் பிரதான பலம் என நான் நம்புகிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே அல்ல, அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தும். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் ஒரே அணியாக விளையாடி பல்வேறு சூழல்களிலிருந்து நிறைய கற்றுள்ளோம். களத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். ஒவ்வொருவரும் தங்கள் பங்கினை நன்கு அறிந்துள்ளனர்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணியாக மாறும் காலம் ஒருநாள் வரும்; ஆனால், அது இன்னும் எட்டப்படவில்லை என நம்புகிறேன்,” என தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனைக்கு ஹேசில்வுட் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.