ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு அறிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

Date:

ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு அறிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கான அணியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சுழற்பந்து வீராங்கனை ஸ்ரீசரணியும் இடம்பெற்றிருந்தார்.

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நேற்றுக் காலை ஸ்ரீசரணி ஆந்திராவுக்கு திரும்பியபோது, விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுடன் இணைந்து ஸ்ரீசரணி முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது, அவருக்கு ரூ.2.5 கோடி பணப் பரிசு, மேலும் குரூப்–1 அரசு வேலை மற்றும் சொந்த ஊரான கடப்பாவில் வீட்டு மனையும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் நேற்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் –...

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம்...

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஹாங்காங் நகரில் நடைபெற்று...

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம் துல்கர் சல்மான், பாக்ய போர்சே,...