ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில்

Date:

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில்

உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணி 8 வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடரு, இத்தாலியின் துரின் நகரில் நவம்பர் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒற்றையர் பிரிவில் 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவு: ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினர் இடம் பெற்றுள்ளனர்.

பிஜோர்ன் போர்க் பிரிவு: நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடைசி இடத்தைப் பெற கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி இடையே போட்டி உள்ளது. தற்போதைய தரவரிசையில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் 8-வது இடத்தில் உள்ளார்; ஆனால், அதன் வார இறுதியில் ஏதன்ஸ் டென்னிஸ் தொடரில் முசெட்டி வென்றால் அவர் 8-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இரு பிரிவிலும் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறுவர். இறுதி ஆட்டம் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்றுக்கொள்ள வந்த வடமாநில மாணவர்கள்

தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்றுக்கொள்ள வந்த வடமாநில...

பொய்யான குற்றச்சாட்டால் பலியான இந்து இளைஞர் – வங்கதேசத்தில் அதிர்ச்சி திருப்பம்

பொய்யான குற்றச்சாட்டால் பலியான இந்து இளைஞர் – வங்கதேசத்தில் அதிர்ச்சி திருப்பம் வங்கதேசத்தில்...

இளைய தலைமுறையிடம் பரத நாட்டியத்தை கொண்டு சேர்ப்பதே இலக்கு!

இளைய தலைமுறையிடம் பரத நாட்டியத்தை கொண்டு சேர்ப்பதே இலக்கு! மார்கழி மாத கலைவிழாக்களின்...

தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்றியதாக திமுக கவுன்சிலர் மீது புகார்

தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்றியதாக திமுக கவுன்சிலர் மீது புகார் திருச்சி மாவட்டத்தில்...