ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில்
உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணி 8 வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடரு, இத்தாலியின் துரின் நகரில் நவம்பர் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒற்றையர் பிரிவில் 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவு: ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினர் இடம் பெற்றுள்ளனர்.
பிஜோர்ன் போர்க் பிரிவு: நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடைசி இடத்தைப் பெற கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி இடையே போட்டி உள்ளது. தற்போதைய தரவரிசையில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் 8-வது இடத்தில் உள்ளார்; ஆனால், அதன் வார இறுதியில் ஏதன்ஸ் டென்னிஸ் தொடரில் முசெட்டி வென்றால் அவர் 8-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இரு பிரிவிலும் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறுவர். இறுதி ஆட்டம் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும்.