உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணியினர் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.
இந்த சந்திப்பில், இந்திய அணியினருடன் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இறுதி போட்டி சம்பந்தமாக அணியினருடன் உரையாடி, ஹர்மன்பிரீத் மற்றும் அமன்ஜோத் கவுர் பிடித்த முக்கிய கேட்ச் குறித்து பேசினார்.
வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு ‘நமோ’ எழுத்து கொண்ட இந்திய அணியின் ஜெர்ஸி வழங்கி, அதில் அணியினர் அனைவரும் கையொப்பமிட்டனர்.