பழநி திருஆவினன்குடி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடந்தது

Date:

பழநி திருஆவினன்குடி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடந்தது

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ. 5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருஆவினன்குடி கோயிலின் பெயர் குழந்தை முருகனுடன் மகாலட்சுமி, கோமாதா, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் வழிபட்டதனால் உருவானது. இங்கு முருகன் குழந்தை வடிவில் மயில் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை வடிவில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இவருடன் இல்லை. பழநி பக்தர்கள் முதலில் இக்கோயிலில் தரிசனம் செய்த பிறகு மலைக்கோயிலுக்கு செல்லுவர்.

கோயிலில் கடந்த 2014 செப்டம்பர் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுக்குப் பிறகு, டிசம்பர் 8-ம் தேதி புதிய கும்பாபிஷேகம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூன் 16-ஆம் தேதி பாலாலய பூஜை மூலம் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, அரசு மற்றும் உபயோகத்தாரின் உதவியுடன் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முகூர்த்தக்கால் நடும் விழா சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகளுடன் தொடங்கி நடைபெற்றது. இதில் பழநி எம்எல்ஏ செந்தில்குமார், நகராட்சி துணை தலைவர் கந்தசாமி, கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குளோபல் சவுத்: மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியா – எத்தியோப்பியா உறவு

குளோபல் சவுத்: மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியா – எத்தியோப்பியா உறவு உலக...

25% கூடுதல் சுங்க வரியை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – அமெரிக்காவுக்கு இந்தியா சமர்ப்பித்த இறுதி வர்த்தக முன்மொழிவு!

25% கூடுதல் சுங்க வரியை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – அமெரிக்காவுக்கு...

செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா?

செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா? திமுக கட்சி மீண்டும்...

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில்...