ரிஷாத் ஹோசைன் சுழலில் சிக்கி சரிந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது.
மிர்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அணியின் சார்பில் தவூஹித் ஹிர்டோய் 90 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள்,
மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 76 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து அணிக்கு நிலைநிறுத்தம் தந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களையும்,
ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்களையும் பெற்றனர்.
பின்னர் 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 39 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அணியின் சார்பில் பிரண்டன் கிங் 44, அலிக் அத்தானஸ் 27, ஷாய் ஹோப் 15, ஜஸ்டின் கிரீவ்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 79/1 என இருந்த அணி, அதன்பின் மற்ற 9 விக்கெட்களை 54 ரன்கள் சேர்க்கும் முன்பே இழந்தது.
வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹோசைன் அசத்தலாக விளையாடி, 9 ஓவர்களில் 35 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதனால் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.