ரஞ்சி போட்டியில் விதர்பா அணி உறுதியான நிலை — தமிழ்கத்தை நோக்கி ரன் குவிப்பு
கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி லீக் ஆட்டத்தில், தமிழகத்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்த தமிழக அணி, நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் (94), ஷாருக் கான் (0) ஆகியோர் இணைந்து தொடங்கியது. இதில் இந்திரஜித் 96 ரன்களில் அவுட் ஆக, ஷாருக் கான் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், முகமது அலி 14 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் குறிப்பிடத்தகுந்த ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தமிழக அணி 107.1 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து விளையாடிய விதர்பா அணி, ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் அமன் மோகடே 80 ரன்களும், சத்யம் போயார் 11 ரன்களும் எடுத்தனர். தற்போது துருவ் ஷோரே 80 ரன்களுடன், ரவிகுமார் சமர்த் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் தமிழகத்தை முந்தும் நிலைக்கு வேகமாக முன்னேறி வருகிறது.