தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர் அதிகரிப்பு

Date:

தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர் அதிகரிப்பு

இந்த ஆண்டைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ–காமர்ஸ் தளங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கான சிறப்பு சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்தன. இதன் விளைவாக 91% நுகர்வோர் இவ்விழா ஷாப்பிங்கில் கார்டு சலுகைகளைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.

மேலும், 48% பேர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சேர்த்து தீபாவளி பொருட்கள் வாங்க முனைந்தனர்.

பைசாபஜார் நடத்திய கணக்கெடுப்பு தகவலின்படி, பெருமளவு மக்கள் கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி இந்த தீபாவளி கொள்முதல் செய்துள்ளனர். குறிப்பாக 42% நுகர்வோர் ரூ.50,000-க்கும் அதிகமாக செலவழித்துள்ளனர் என்பது முக்கிய முடிவாகும்.

அதேபோல்,

  • 22% பேர் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை
  • 20% பேர் ரூ.1 லட்சம் மேல்

கிரெடிட் கார்டு மூலம் தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளனர்.

2,300 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில், அதிகமாக வாங்கப்பட்ட பொருட்களில்,

  • ஹோம் அப்ளையன்ஸ்கள் – 25%
  • மொபைல் மற்றும் கேட்ஜெட்டுகள் – 23%
  • ஆடைகள் – 22%

இடம்பிடித்தன.

சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்ந்து உயர்ந்து வருவதாக பைசாபஜார் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் 7-ஆம்...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து சிபிஎஸ்இ 12-ஆம்...

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல் 2016 முதல்...

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும்...