லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’க்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் இதில் இணைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் கூறிய கதை அமைப்பு ரஜினிக்கு பிடித்திருக்கிறது; ஆனால் முழு ஸ்கிரிப்ட் இன்னும் கேட்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் திட்டமும் உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். ஆனால், இதற்கான கதையை இன்னும் தேர்வு செய்யவில்லை என ரஜினி முன்பே தெரிவித்துள்ளார். இந்த படத்தை நெல்சனே இயக்குவார், மேலும் 2027ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
சினிமா வட்டாரத்தில் பரவும் தகவலின்படி — இந்த கமல்–ரஜினி இணைப்பு படம் தான் ரஜினியின் கடைசி படம் ஆக இருக்கலாம்; அதன் பிறகு அவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெறலாம் என கூறப்படுகிறது.