இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து: டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து: டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடுமையான போர் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகிய நிலையில், அமெரிக்கா பலமுறை சமரச முயற்சிகளை மேற்கொண்டது.

அண்மையில் ட்ரம்ப் முன்வைத்த 20 அம்ச அமைதி திட்டம் அடிப்படையாகக் கொண்டு, எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இஸ்ரேலின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும், ஹமாஸ் மூத்த தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழுவும் கலந்து கொண்டன. நீண்டநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு, நேற்று இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டன.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்:

“காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். வரும் திங்கட்கிழமை முதல் பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படலாம்.

இஸ்ரேல் ராணுவம், ஒப்பந்தத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோடு பகுதிக்கு பின் நகரும். இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதிக்கான முதல் முக்கியமான படி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய சமரச பங்காற்றின. அவர்களுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்,” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னர் நெதன்யாகு தனது பதிவில்,

“அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் டொனால்டு ட்ரம்ப். அவரது முயற்சியே இந்த போர் நிறுத்தத்தின் அடிப்படை,”

என்று பாராட்டினார்.

ட்ரம்ப் அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் – ரூ.2,709 கோடி வழங்கப்பட்டது: அமைச்சர் அர. சக்கரபாணி

குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் – ரூ.2,709...

மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம் — ரூ.48 கோடியில் ஒப்பந்தம்

மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம் — ரூ.48 கோடியில்...

டி20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் கொடுப்பார் – ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ்

டி20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் கொடுப்பார் – ஆஸ்திரேலிய கேப்டன்...

தமிழில் டைரக்டராக அறிமுகமாகிறார் ஷாலின் ஜோயா

தமிழில் டைரக்டராக அறிமுகமாகிறார் ஷாலின் ஜோயா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம்...