திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரம்: பிட்சாடனர் வீதியுலா – ஆழித்தேரை வலம் வந்து பக்தர்கள் தரிசனம்!
திருவாரூர் உலகப் புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 25ஆம் நாள் முக்கிய நிகழ்வான பிட்சாடனர் வீதியுலா வைபவம் நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த வைபவத்தை முன்னிட்டு, அகோர மூர்த்தி மற்றும் பிட்சாடனர் சுவாமிகளுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்கக் கோயிலில் இருந்து புறப்பட்ட பிட்சாடனர், நான்கு வீதிகளிலும் உலா வந்து பிரம்மாண்டமான ஆழித்தேரை மூன்று முறை வலம் வந்தார். இந்த ஆன்மீகக் நிகழ்வைக் காணத் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர் நிகழ்வுகளால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது






