இது தொடக்கம்தான்… கபடியில் கண்ணகி நகர் கார்த்திகாவின் தங்க வெற்றி!

Date:

இது தொடக்கம்தான்… கபடியில் கண்ணகி நகர் கார்த்திகாவின் தங்க வெற்றி!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில், இந்திய மகளிர் அணி தங்கம் வென்று பெருமை சேர்த்தது. இந்த அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளங்கி, அணியின் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தார்.

இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அந்த வெற்றியில் கார்த்திகாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகா, சிறுவயதிலிருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டினார். 12 வயதில் கபடியில் ஈடுபட்ட அவர், பெற்றோரின் உற்சாகமும் பயிற்சியாளர் ராஜியின் வழிகாட்டுதலும் காரணமாக, மாநில அளவிலிருந்து சர்வதேச அளவுக்கு உயர்ந்தார். கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அவர், SGFI, Khelo India, Federation Nationals உள்ளிட்ட பல தேசிய போட்டிகளில் 11 முறை தமிழ்நாட்டுக்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், 5 முறை தமிழ்நாடு அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு. தற்போது இந்திய இளையோர் பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக பணியாற்றி, அணியை தங்க வெற்றிக்குத் தள்ளியுள்ளார்.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் தங்க வெற்றியை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கார்த்திகா மற்றும் ஆடவர் அணியின் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு தலா ₹25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.

சென்னை திரும்பிய கார்த்திகா, “நான் கண்ணகி நகர் ஆளு. எங்கள் பகுதி மீதுள்ள எதிர்மறை பார்வையை இந்த வெற்றி உடைக்கும். இந்த சாதனை என் பெற்றோர், பயிற்சியாளர், மற்றும் எங்கள் பகுதி மக்களுக்கு அர்ப்பணம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கண்ணகி நகர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரின் பெற்றோர், “பெண்கள் விளையாட்டில் முன்னேறலாம் என்பதற்கான சிறந்த உதாரணம் கார்த்திகா,” என பெருமிதம் தெரிவித்தனர்.

பயிற்சியாளர் ராஜி, “இது கார்த்திகாவின் பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இன்னும் பல சாதனைகள் அவரை நோக்கி வருகின்றன,” என உற்சாகத்துடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அமைச்சரவை ஒப்புதல் பெற்றதின் பின் மட்டுமே காசா அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வரும்: இஸ்ரேல் அறிவிப்பு

அமைச்சரவை ஒப்புதல் பெற்றதின் பின் மட்டுமே காசா அமைதி ஒப்பந்தம் அமலுக்கு...

மோந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் இன்று மதியம் 12 மணி முதல் கடைகள் மூட உத்தரவு

மோந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் இன்று மதியம் 12 மணி முதல்...

எனது பொது வாழ்க்கையின் தொடக்கம் கோவையில் தான்” – பெருமிதத்துடன் கூறிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

“எனது பொது வாழ்க்கையின் தொடக்கம் கோவையில் தான்” – பெருமிதத்துடன் கூறிய...

சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக...