ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான தாக்குதல்களைக் கைவிடவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், ஏற்கனவே ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது 5 நாட்களுக்குத் தாக்குதல் நடத்தப்படாது என ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்தத் தாக்குதல் நிறுத்தக் காலத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச நாடுகளின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகமாகப் போர் பதற்றத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










