2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு

Date:

2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு

ஓஸ்லோ: 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காக நீண்டநாள் போராடி வரும் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

வெனிசுலாவில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத் தருவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக மச்சாடோ இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இந்த அறிவிப்பை நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் வெளியிட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவன்” என்று முன்பே கூறியிருந்தாலும், இவ்வாண்டு அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை.

மரியா கொரினா யார்?

மரியா கொரினா மச்சாடோ, வெனிசுலா அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். உயிருக்கு ஆபத்து இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேறாமல், ஜனநாயகத்திற்காக போராடி வரும் அவரது தைரியம் வெனிசுலா மக்களின் பெரும் மரியாதையைப் பெற்றுள்ளது. அவர் பல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ராணுவ ஆட்சியை அகற்றும் முயற்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

338 பரிந்துரைகளில் தேர்வு

இந்த ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசுக்கு மொத்தம் 338 பரிந்துரைகள் வந்திருந்தன — அதில் 244 தனிநபர்கள், 94 அமைப்புகள் அடங்கும். கடந்த ஆண்டு, ஜப்பானின் நிஹோன் ஹிதான்கியோ என்ற அமைப்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

விருது வழங்கும் விழா

அமைதி, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அமைதிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார நோபல் பரிசு அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

விருதுபெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம், பட்டயம், மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.03 கோடி) வழங்கப்படும். விழா ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தண்டு விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தண்டு விரதம் இருந்து பக்தர்கள்...

தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகையால் மதுரையின் முகம் மாறுமா?

தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகையால் மதுரையின் முகம் மாறுமா? மதுரை: தமிழகத்தை 2030க்குள்...

தெருநாய் பிரச்சனை: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தெருநாய் பிரச்சனை: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் உச்ச...

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர் உதயநிதி

அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர்...