“உருளைக்கிழங்கு” எனத் தனிநபர் கிண்டல்: பொறியியல் நிறுவனத்திற்கு ₹29 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் தீர்ப்பாயம் அதிரடி!
இங்கிலாந்தில் பணிபுரியும் பெண்ணை அவரது பூர்வீகத்தை வைத்து “உருளைக்கிழங்கு” (Potato) எனத் தொடர்ந்து கிண்டல் செய்த நபருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு, அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 29 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்பவர், இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ஒரு பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தின் இயக்குநரான மிக் அட்கின்ஸ் என்பவர், ஹேய்ஸை அவரது அயர்லாந்து பூர்வீகத்தை வைத்து ‘Paddy’ (அயர்லாந்து மக்களைக் குறிக்கும் ஒரு சொல்), ‘Stupid Paddy’ மற்றும் ‘உருளைக்கிழங்கு’ எனக் கூறித் தொடர்ந்து கிண்டல் செய்துள்ளார். சுமார் 6 மாத காலம் இத்தகைய இன ரீதியான வசவுச் சொற்களை எதிர்கொண்ட ஹேய்ஸ், இறுதியாக நீதிமன்றத்தில் முறையிட்டார்.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:
இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம், ஒருவரது பிறப்பிடத்தை வைத்து மீண்டும் மீண்டும் இகழ்வது அல்லது கிண்டல் செய்வது என்பது “இன ரீதியான துன்புறுத்தல்” (Racial Harassment) என்று தெளிவுபடுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்திய மதிப்பில் ₹29 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இந்தியாவிலும் இது போன்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால், பல நிறுவனங்கள் திவாலாகிவிடும்” என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாகவும், அதே சமயம் பணிபுரியும் இடங்களில் கண்ணியம் தேவை என்ற கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.