மாதவிடாய் விடுப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி நிராகரிப்பு – வேலைவாய்ப்பு பாதிக்கும் என எச்சரிக்கை
மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதவிடாய் விடுப்பைக் கட்டாயமாக்கினால் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கும் என்றும், இது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், இத்தகைய விடுமுறை நடைமுறை ‘பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் இல்லை’ என்ற எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது போன்ற விவகாரங்களில் மத்திய அரசே முறையான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மனுவை நிராகரித்தனர்.