கோவை இஸ்கான் வளாகத்தில் 60,000 சதுர அடியில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் – கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

Date:

கோவை இஸ்கான் வளாகத்தில் 60,000 சதுர அடியில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் – கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

கோவை பீளமேடு, கொடிசியா அருகே அமைந்துள்ள இஸ்கான் (ISKCON) ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில், 60 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த கோயில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் 2001ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016ஆம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, அடுத்த ஆண்டுக்குள் முழுமையடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்கான் கோயிலின் உப தலைவர் மதுகோபால்தாஸ் கூறியதாவது:

“இந்த கோயில் மூன்று தளங்களைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 60,000 சதுர அடியில், முதல் தளம் 20,000 சதுர அடியாக 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2,400 சதுர அடியில் கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டு, ராதாகிருஷ்ணர், ஜெகந்நாதர், பலராமர், சுபத்ராதேவி ஆகிய தெய்வங்கள் வீற்றிருப்பர்.

மேலும், கோயிலில் தெப்பக்குளம் அமைக்கப்படுவதோடு, ‘தமால்’ மரம் ஸ்தல விருட்சமாக பிரதிஷ்டை செய்யப்படும். இரண்டாவது தளத்தில் 6,000 சதுர அடியில் டைனமிக் எக்ஸ்சிபிஷன் அரங்கு உருவாக்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன், இளைஞர்கள் வேத கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.”

அவர் மேலும் கூறினார்:

“கோயிலின் நான்கு திசைகளிலும் நுழைவுக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இவை தென்னக சிற்பக் கலையில், பளிங்கு கற்களால் உருவாக்கப்படுகின்றன. கோயிலின் உள்ளே 140க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் பாகவத ஸ்லோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தரையிலிருந்து 108 அடி உயரத்தில் விமானம் அமைக்கப்பட்டு, அதன் மீது 13 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஆன்மிக போதனைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான அரங்கமும் உருவாக்கப்படுகிறது.”

இக்கோயில், தமிழகத்தில் உருவாகும் மிகப்பெரிய ராதாகிருஷ்ணர் கோயிலாக இருக்கும் என்றும், இது கலாச்சாரம் மற்றும் கல்வி மையமாக திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பக்தி விநோத சுவாமி மகாராஜ் தலைமையில், இஸ்கான் அமைப்பினரால் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து இபிஎஸ் விமர்சனம்

‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வர்...

தனது வெற்றிக்கதை பகிரும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் எஸ். ராஜரத்தினம்

தனது வெற்றிக்கதை பகிரும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் எஸ்....

தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள் வலியுறுத்திய முக்கிய கோரிக்கை

தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள்...

ராஷ்மிகா மந்தனாவுக்கு முக சிகிச்சை – போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுப்பு

ராஷ்மிகா மந்தனாவுக்கு முக சிகிச்சை – போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுப்பு தென்னிந்திய...