இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 போர் விமானம் மாயம்: தேடுதல் பணி தீவிரம்!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் ஒன்று திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த விமானம், நேற்று இரவு சுமார் 7:42 மணி அளவில் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் மாயமானது குறித்து விமானப்படையின் உயர்மட்டக் குழு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்ட குறிப்பிட்ட அந்தப் பகுதியில் விமானத்தைத் தேடும் பணிகளுக்காகப் பிரத்யேக விமானப்படை தேடுதல் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் விமானப்படை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.