அசாமில் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: இரண்டு விமானப்படை வீரர்கள் வீரமரணம்!
ஜோர்ஹட் / கர்பி ஆங்லாங்:
அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சூ-30 எம்கேஐ (Sukhoi Su-30 MKI) போர் விமானம் பயிற்ச்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் விமானத்தில் இருந்த இரண்டு இளம் அதிகாரிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விபத்து நடந்த விதம்:
அசாமின் ஜோர்ஹட் (Jorhat) விமானப்படை தளத்தில் இருந்து நேற்றிரவு வழக்கமான பயிற்சிக்காக இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. இரவு சுமார் 7 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்தது. தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், விமானம் அசாமின் கர்பி ஆங்லாங் (Karbi Anglong) மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.
வீரமரணம் அடைந்த வீரர்கள்:
இந்த விபத்தில் படுகாயமடைந்த:
- ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் (Squadron Leader Anuj)
- ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் (Flight Lieutenant Purvesh Dhurkar)
ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு இந்திய விமானப்படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
சுகோய் விமானத்தின் பின்னணி:
- ரஷ்ய தயாரிப்பு: 1997-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட இந்த ரக விமானங்கள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன.
- உள்நாட்டுத் தயாரிப்பு: தற்போது சுமார் 250-க்கும் மேற்பட்ட சுகோய் விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன. இவற்றை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) தற்போது உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
விசாரணைக்கு உத்தரவு:
விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய இந்திய விமானப்படை உயர்நிலை விசாரணைக்கு (Court of Inquiry) உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்த தகவல்கள் விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.