நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர்: மோடியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
மும்பை: கனடா பிரதமர் மார்க் கார்னி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். மும்பை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பயணத்தின் முதல் இரண்டு நாட்களை மும்பையில் செலவிடும் அவர், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள், நிதித்துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் ஒன்றாம் தேதி டெல்லி செல்லும் பிரதமர் மார்க் கார்னி, மார்ச் இரண்டாம் தேதி ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்த உயர்மட்டச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.